பிக்பாஸ் இல்லத்தில் கணேஷை ஏமாற்றிய சினேகன், ஹரிஷ்! வெடிக்கும் சர்ச்சை?..!! (வீடியோ)
பரபரப்புடன் நடந்து வரும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது.பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று போட்டியாளர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பு கொடுக்கப்பட்டது. 10 இலட்சம் ருபாய் கொடுக்கப்படும், அதை எடுத்துக்கொண்டு போட்டியில் இருந்தும் வீட்டில் இருந்தும் வெளியேறிவிடவேண்டும் என கூறப்பட்டது.
ஒருவர் தான் வெற்றி பெறுவார் என்பதால் யாரேனும் அந்த பணத்தை எடுத்துகொண்டு வெளியேறலாம் என கூறப்பட்டது. ஆனால் உண்மையில் யாரும் அதை எடுக்கவில்லை.அதற்கு பின்னர் சினேகன்-ஹரிஷ் ஆகியோர் கணேஷை ஏமாற்றுவதற்கான சண்டை போடுவது போல நடித்தனர்.
10 லட்சம் ரூபாய் எடுத்துக்கொண்டு வெளியேறுவது பற்றி ஹரிஷ் விளையாட்டாக ஏதோ கூற, சினேகனுக்கு கோபம் வந்துவிட்டது. “இதெல்லாம் ஆரவ்விடம் வைத்துகொள்ளுங்கள், என்னிடம் வேண்டாம்” என கூறினார்.ஆனால் சில நிமிடங்கள் கழித்து சிரித்துக்கொண்டே ‘சண்டை போடுவது போல நடித்தேன்” என கூறி ஹரிஷுக்கு ஷாக் கொடுத்தார். இதனை பார்த்து கணேஷை அமைதியாக சிரித்துக் கொண்டிருந்தார்.
Average Rating