தாயை கொடூரமாக தாக்கிவிட்டு மகளை கடத்திச் சென்ற கும்பல்: வைரலாகும் வீடியோ..!!

Read Time:2 Minute, 11 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (1)இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தாயை கொடூரமாக தாக்கிவிட்டு அவருடைய மகளை இரண்டு பேர் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தில், ஆமத் கான் என்னும் நபர் 18 வயதுக்கூட பூர்த்தியடையாத அவருடைய மகளை பணத்திற்காக சௌகாத் என்பவருக்கு திருமணம் முடித்து வைத்துள்ளார்.

ஆனால் இந்த திருமணத்தில் சிறுமியின் தாய்க்கு சிறிதளவும் சம்மதம் இல்லை. அதனால் திருமணத்திற்கு பிறகும் தனது தாயுடன் இருந்த சிறுமியை தேடி செப்டம்பர் 21ம் திகதி சௌகாத் அவருடைய நண்பருடன் வந்துள்ளார்.

அப்பொழுது சிறுமியை சௌகாத்துடன் அனுப்ப சிறுமியின் தாய் மறுத்துள்ளார். அதனால் சிறுமியின் தாயை சௌகாத் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர்.இந்த சம்பவம் பட்டபகலில் நடந்துள்ளது. ஆனாலும் இந்த கொடூர சமபவத்தை தட்டிக்கேட்க அக்கம் பக்கத்தினர் யாரும் முன்வரவில்லை.

ஆனால் இந்த சம்பவத்தை பார்த்த ஒருவர் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.மேலும் இந்த சமபவம் குறித்து சிறுமியின் தாயார் பொலிசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்று வழக்கு பதிந்த பொலிசார் சிறுமியை திருமணம் செய்து கடத்திச் சென்ற சௌகாத்தையும் அவரது நண்பரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெண்டைக்காயின் மருத்துவகுணம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!!
Next post பெண்களுக்கு உடலுறவில் விருப்பம் குறையும் பிரச்சனையும் தீர்வுகளும்..!!