145 வயதிலும் மரணம் தழுவாத நபர்..!!
Read Time:1 Minute, 14 Second
இந்தோனேசியாவில் வசிக்கும் ஒருவர் உலகின் வயது கூடிய மனிதர் எனும் பட்டத்தை பெற்றுள்ளார்.மரணிப்பதற்கு தயாராக இருந்த போதிலும் மரணம் தன்னை தழுவ மறுக்கிறது என அவர் கூறியுள்ளார்.
1870 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி பிறந்துள்ள பா கோத் எனும் இவருக்கு இப்போது 145 வயதாகின்றது.இவருக்கு நான்கு மனைவிகளும் 1௦ குழந்தைகளும் இருந்துள்ளனர்.
இவர்கள் இப்போது உயிருடன் இல்லாத நிலையில் பேரக்குழந்தைகளுடன் வாழ்வை கழித்து வருவதாக கூறப்படுகிறது.இவருக்கு கல்லறை கட்டப்பட்டுவிட்ட நிலையில் தன்னால் இறக்க முடியவில்லை என்றும் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றார்.
மற்றும் அவரது வேலைகளை அவரே செய்துகொள்ளக்கூடியவர் என்றும் இவரது பொறுமை தான் இவரை இவ்வளவு காலம் உயிர் வாழ வைத்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating