தேனி அருகே 10-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த வாலிபர் கைது..!!

Read Time:1 Minute, 43 Second

201710011756289895_Youth-arrested-for-molestation-10th-girl-student-near-theni_SECVPFதேனி அருகே உத்தமபாளையம் அடுத்த காக்கில்சிக்கையன்பட்டியை சேர்ந்தவர் காஜாமைதீன் மகன் அகமதுமீரான் (வயது18). ரொட்டி பொருட்களை கடைகளில் சப்ளை செய்யும் வேலை செய்து வருகிறார். அப்போது அதேபகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.

பின்பு அவரது செல்போன் வாங்கிக் கொண்டு தொடர்ந்து வாட்ஸ்அப், எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளார். ஆசைவார்த்தை கூறி மாணவியை காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.

மாணவியும் பள்ளிக்கு செல்லாமல் அகமது மீரானுடன் சுற்றியுள்ளார். தற்போது காலாண்டு விடுமுறை விடப்பட்டதால் மாணவியை வெளியூர் செல்ல அழைத்துள்ளார்.

அவருடன் மாணவி சென்றதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிபார்த்தும் கிடைக்காததால் உத்தமபாளையம் போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திய போது அகமதுமீரான் அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை கற்பழித்துள்ளார். இதனால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் அகமதுமீரானை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இணையத்தில் வைரலாக பரவி வரும் ரஷ்ய நாட்டு பெண்களின் ஜிமிக்கி கம்மல் நடனம்..!! (வீடியோ)
Next post BiggBoss நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த ஹரிஷ் என்ன சொல்றார் பாருங்களேன்..!!