இலங்கையர் வயிற்றில் இருந்த 14 தங்கக் கட்டிகள் அகற்றப்பட்டது…!!
Read Time:1 Minute, 17 Second
இலங்கையர் ஒருவரின் வயிற்றில் இருந்து, 100 மற்றும் 150 கிராம் நிறையுடைய, 14 தங்கக் கட்டிகளை, இந்திய வைத்தியர்கள் வௌியே எடுத்துள்ளனர்.
விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் வைத்து, ஆசனவாயில் வைத்து இரு தங்கக் கட்டிகளை கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
நடையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாகவே இவரை, அதிகாரிகள் சோதனையிட்டனர்.
இதனையடுத்து, ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில், இவரை எக்ரே பரிசோதனைக்கு உட்படுத்திய போது, வயிற்றில் 14 தங்கக் கட்டிகள் இருப்பது தெரியவந்துள்ளது.
பின்னர், வைத்தியர்கள் சத்திர சிகிச்சை செய்யாமலேயே அவற்றை வௌியே எடுத்துள்ளனர்.
இதன் பின்னர், 54 வயதான குறித்த சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக சுங்கப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Average Rating