ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வெட்டிக்கொலை: தூங்கிக் கொண்டிருக்கும்போது மர்ம நபர்கள் வெறிச்செயல்…!!
ராஜஸ்தான் மாநிலத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வெட்டிக்கொலை: தூங்கிக் கொண்டிருக்கும்போது மர்ம நபர்கள் வெறிச்செயல்
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் நகரில் பன்வாரி லால் என்பவர் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் அண்ணன் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். நேற்று அவரது அண்ணன் வெளியூருக்கு சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றிரவு பன்வார்லி தனது மகன்கள் மற்றும் அண்ணன் மகன்களுடன் ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அவரது மனைவியும், அண்ணன் மனைவியும் அருகில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது பன்வாரியின் அறைக்குள் புகுந்த மர்ம நபர்கள் கூர்மையான ஆயுதத்தால் தூங்கிக் கொண்டிருந்த பன்வாரி மற்றும் 4 குழந்தைகளை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பக்கத்து அறையில் தூங்கியவர்கள் காலையில் எழுந்தபோதுதான் ஐந்து பேரும் கொலை செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.
உடனே, இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 5 பேரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். இக்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating