பி.ஆர்.ஓ. யூனியன் பொதுச் செயலாளராக பெருதுளசி பழனிவேல் தேர்வு…!!
மக்கள் தொடர்பாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பதவிக்கு நடத்தப்பட்ட தேர்தலில் பெருதுளசி பழனிவேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஒரு திரைப்படத்திற்கும், பத்திரிகையாளர்களுக்கும் பாலமாக இருப்பது மக்கள் தொடர்பாளர்கள் என்னும் பி.ஆர்.ஓ.க்கள். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பி.ஆர்.ஓ. யூனியனில் தேர்தல் நடத்தப்படும். கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் தலைவராக டைமண்ட் பாபுவும், பொதுச் செயலாளராக ஜானும், பொருளாளராக விஜய் முரளியும் தேர்வு செய்யப்பட்டார்கள்.
இந்நிலையில், பொதுச் செயலாளராக பணியாற்றி வந்த ஜான், தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால், பி.ஆர்.ஓ. யூனியன் பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் பெருதுளசி பழனிவேலும், ராமானுஜமும் போட்டியிட்டார்கள்.
இந்த போட்டியில், பெருதுளசி பழனிவேல் வெற்றி பெற்று, பி.ஆர்.ஓ யூனியன் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பெருதுளசி பழனிவேல் இதற்கு முன் 14 முறை பொதுச் செயலாளராக பணியாற்றி இருக்கிறார். தற்போது 15வது முறையாக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating