மின்னும் சருமம் வேண்டுமா? இதை ட்ரை பண்ணுங்க…!!

Read Time:2 Minute, 36 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90புளியில் வைட்டமின்கள், நார்ச்சத்து, அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை உள்ளது.

இவை சருமத்திற்கு ஊட்டம் அளித்து, முதுமைத் தோற்றம் வருவதைத் தடுக்கும். புளி சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

இதற்கு புளியில் உள்ள வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கனிமச்சத்துக்கள் தான் காரணம். இப்போது புளியைக் கொண்டு எப்படி சருமத்தை எவ்வாறு பராமரிப்பது என்று பார்க்கலாம்.

முகப் பொழிவிற்கு

தண்ணீரில் புளியை சிறிது நேரம் ஊறவைத்துக்கொள்ள வேண்டும். அந்த தண்ணீரை கொண்டு முகத்தை கழுவி வந்தால் முகம் பொலிவு பெறும்.

வடுக்கள் மறைய

புளியை சிறிது அரைத்து, அதனுடன் பால் சேர்த்து குழைத்து முகத்தில் தடவ வேண்டும். நன்றாக உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

வாரம் இருமுறை செய்து வந்தால் முகம் பளிச்சென்று காட்சி தரும். வடுக்களும் மறைய தொடங்கும்.

இறந்த செல்கள் நீங்க

இறந்த செல்களை நீக்கி முகத்திற்கு பளிச் தோற்றம் தருவதிலும் புளியின் பங்களிப்பு அதிகம். புளியுடன் பால் கலந்து மென்மையான துணியால் முகத்தை தேய்க்க வேண்டும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

வறட்சியை போக்க

புளியை ரோஸ் வாட்டரில் கலந்து ஸ்பிரேயாகவும் பயன்படுத்தலாம். அதனை கடுங்குளிர் மற்றும் கோடை காலங்களில் பயன்படுத்தி வருவது சரும வறட்சியை போக்கி சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும்.

புளி, பால், மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்த்து குழைத்து கண்களுக்கு அடியில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த பாலை கொண்டு கண்களை கழுவிவர விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலுறவுக்கு பின்,மனைவியிடம் இதை செய்ய சொல்லும் நபரா நீங்க?..!!
Next post பொது மேடையில் பிரபல நடிகைக்கு லிப்-லாக் முத்தம் கொடுத்த Wonder Woman..!!