போராளிகளுக்கு உணவளித்த பெண்ணுக்குக் கிடைத்த கடுமையான தண்டனை..!!

Read Time:1 Minute, 25 Second

கொங்கோ குடியரசில், அரசுக்கு எதிரான போராளிகளுக்கு உணவளித்த குற்றத்துக்காக, பெண்ணொருவர் அவரது மகனாலேயே வலுக்கட்டாயமாக, அதுவும் பகிரங்கமாக பாலுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டார்.

குறித்த பெண் உணவகம் ஒன்றை நடத்தி வந்தவர். அங்கு, அரசுக்கெதிரான போராளிகள் சிலர் உணவருந்திச் சென்றுள்ளனர்.

இதையறிந்த ஒரு கும்பல், கடைக்குள் இருந்த அந்தப் பெண்ணையும், அவரின் கணவரது மற்றொரு மனைவியின் மகனையும் நிர்வாணப்படுத்தியபின் பொது இடத்துக்கு இழுத்து வந்தனர்.

பின்னர், அவர்கள் இருவரையும் கடுமையாகத் தாக்கியபின், அவரது மகனைக் கொண்டே அந்தப் பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்தினர்.

அதன்பின், இருவரது தலைகளையும் வாளால் துண்டித்துப் படுகொலை செய்தனர்.

இச்சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் எட்டாம் திகதியே இடம்பெற்றுள்ளபோதும், இது குறித்த காணொளி ஓரிரு நாட்களுக்கு முன்னரேயே இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சின்ன குஷ்புவை பார்க்க ஈரோட்டை திணறடித்த ரசிகர்கள்..!!
Next post நான்காவது முறையாக அப்பாவானார் பவர் ஸ்டார்..!!