தானா சேர்ந்த கூட்டம் ஷுட்டிங் பாதியில் நிறுத்தம்! படக்குழுவில் வாக்குவாதம்..!!
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படம் ஷூட்டிங் இறுதிகட்டத்தை நெருங்கிவருகிறது. நேற்று திருவையாறு காவிரி கரையில் முன் அனுமதி பெற்று ஷுட்டிங் ஆரம்பிக்கப்பட்டது.
ஆனால் அப்பகுதியில் அதிகாலை முதலே பல புரோகிதர்கள் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்வை நடத்தி வந்தனர். ஆனால் அதன் பின் வந்த படக்குழு சூர்யா நூற்றுக்கணக்கான நடன கலைஞர்களோடு பாடலுக்கு ஆடுவதை ஷூட்டிங் எடுத்துகொண்டிருந்தார்களாம்.
கூட்டம் கருதி அப்பகுதியில் படக்குழுவினர் திதி கொடுக்க வந்தவர்களை அனுமதிக்க வில்லையாம். இதனால் வாக்குவாதம் ஏற்பட புரோகிதர்கள் தங்கள் சங்கத்தின் மூலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
உடனே போலிசார் ஸ்பாட்டிற்கு வந்து பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் ஷூட்டிங் நடத்திக்கொள்ளுங்கள். மேலும் 12 மணிக்கு மேல் உங்களது வேலைகளை தொடங்குங்கள் என உத்தரவிட்டார்களாம்.
இதனால் ஷூட்டிங் பாதியில் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Average Rating