தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர்..!!

Read Time:2 Minute, 7 Second

நாமக்கல் அருகே தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு, ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி கவுண்டர் தெருவைச் சேர்ந்தவர் செல்வம்(51). அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கணவன், மனைவி இருவரும், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு சுமதி வேலகவுண்டம்பட்டி பொலீஸ் ஸ்டேஷனில் ஒரு புகார் அளித்தார். அதில் தனது மகள் காவ்யாவை(15), கணவர் செல்வம் அடிக்கடி கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து வருவதாக தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி பொலீசார் விசாரித்து ஆசிரியர் செல்வத்தை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, நாமக்கல் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.

நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோவன், ஆசிரியர் செல்வத்துக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, செல்வம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு, வீட்டில் தனியாக இருந்த மகள் காவ்யாவை, செல்வம் தனது அக்கா மற்றும் கூலிப்படை மூலம் கொலை செய்தார். இந்த வழக்கில் கைதாகி தற்போது, ஜாமீனில் வெளிவந்துள்ள செல்வத்துக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த கொலை வழக்கு, மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காண்டிராக்டரை தாக்கிய வழக்கில் நடிகர் சந்தானத்துக்கு முன்ஜாமீன் கிடைக்குமா?..!!
Next post தானா சேர்ந்த கூட்டம் ஷுட்டிங் பாதியில் நிறுத்தம்! படக்குழுவில் வாக்குவாதம்..!!