தற்போது எனக்கு தேவையானது ஒரு மனைவி மட்டும் தான் : 10 வயது சிறுவன்..!!
இங்கிலாந்தில் 10 வயது சிறுவன் தனது பெற்றோரை விட்டு தனியாக வசிக்க ஆரம்பித்துவிட்டதால் தற்போதைய நிலைக்கு தனக்கு ஒரு மனைவி மட்டும் தான் வேண்டும் என தெரிவித்துள்ளான்.
எக்ஸெஸ் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த ஜெக் ஜோய் என்ற சிறுவன் தான் வளர ஆரம்பித்துவிட்டதால் தனது சகோதரியுடன் சேர்ந்து ஒரே அறையில் பொருட்களை பகிர்ந்துகொள்ள முடியவில்லை என்றும் ,அது தனக்கு பெரும் இடைஞ்சலாக இருந்த காரணத்தால் தனது பெற்றோரிடம் சொல்லி கேரவன் ஒன்றினை ஏற்பாடு செய்துகொண்டுள்ளார்.
தனியான சமயலறை, படுக்கையறை, குளியலறை என அனைத்தையும் தயார்படுத்திக்கொண்ட இச்சிறுவன் தனக்கென்று சொந்தமாக ஒரு பைக்கும் வைத்திருக்கிறார்
“தற்போது எனக்கு 10 வயதாகிறது, எனக்கு தேவையானவை அனைத்தும் என்னிடம் இருக்கிறது ஆனால் சிறுவயது என்பதால் இன்னும் 8 வருடத்துக்கு பைக் இருந்தும் என்னால் ஓட்ட முடியாது .
இனிமேல் எனக்கு தேவையான பணத்தினை நானே சம்பாதித்துக்கொள்வேன், என் பெற்றோரிடம் இருந்து எதிர்பார்க்கமாட்டேன்.
முழுமையாக வளர்ந்துவிட்ட ஒரு ஆளாகவே என்னை எனது பெற்றோர் பார்க்கின்றனர், தற்போது எனக்கு தேவையானது ஒரு மனைவி மட்டும் தான்” என கூறியுள்ளான்.
Average Rating