மருமகளை கொலை செய்த மாமனார்!… முகம்சுழிக்க வைக்கும் காரணம்..!!

Read Time:1 Minute, 38 Second

இந்தியாவில் சேலம் மாவட்டம் மேட்டூர் அனல்மின் நிலையம் பின்புறம் உள்ள துறையூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வேல்முருகன் தனது மனைவி அம்பிகாவுடன் வசித்து வந்தார். இவர்களின் வீட்டின் அருகில் அம்பிகாவின் மாமனார் பெரியசாமியும், மாமியார் முத்தாயியும் குடியிருந்து வருகின்றனர்.

இந்நிலையில் பெரியசாமி அவனது மருமகள் அம்பிகாவிடம் தகாத முறையில் நடக்க முயற்சி செய்தததாக கூறப்படுகிறது. இதற்கு அம்பிகா மறுப்பு தெரிவித்ததை அடுத்து, அவரை இரும்பு கம்பியால் தலையில் அடித்து கொலை செய்துவிட்டு பெரியசாமி தலைமறைவாகி உள்ளார்.

இது தொடர்பாக கருமலைக் கூடல் பொலிசார் வழக்கு பதிந்து தலைமறைவாக இருந்த பெரியசாமியை தேடி வந்தனர். இந்நிலையில் ரெட்டியூரில் உள்ள கிணற்றில் பெரியசாமி ஒளிந்து இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து கருமலைக்கூடல் பொலிசார் அவரை கைது செய்ய சென்றனர்.

ஆனால் பெரியசாமி மேலே ஏறி வர மறுத்ததையடுத்து தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப் பட்டு கயிறு கட்டி மேலே கொண்டு வந்து கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘ஸ்வீட் கார்ன்’… இனிப்பான செய்திகள்..!!
Next post உடலுறவின் பின் என்ன செய்ய வேண்டும் .? ஆபாசம் அல்ல அவசியம்..!!