பெண்களே நீங்க…உடல் வலிமை பெற! புடலங்காயின் மகத்துவங்கள்…!!
காய்கறி வகையைச் சேர்ந்த இந்த புடலங்காயை கூட்டு, பொறியல், குழம்பு போன்று விதவிதமாக செய்து சமைத்து சாப்பிடலாம்.நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே சமைத்து சாப்பிடக் கூடிய மிகவும் அற்புதமான சத்துக்கள் கொண்டது புடலங்காய்.
இந்த புடலங்காயில், இரும்புச்சத்து, நார்ச்சத்து, புரதச்சத்து, கால்சியம் மற்றும் விட்டமின்கள் என்று ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.
புடலங்காயின் மருத்துவப் பயன்கள்ஆ ண்களிடம் விந்துவை கெட்டிபடுத்தி, ஆண்மை தொடர்பான கோளாறுகளை போக்கி, காமத்தன்மையை அதிகரிக்கும் வல்லமையை புடலங்காய் பெற்றுள்ளது.
உடல் மெலிந்து உள்ளவர்கள் இந்த புடலங்கயை சமைத்து சாப்பிடுவதால், நல்ல உடல் பருமன் கிடைக்கும்.புடலங்காயை உணவில் தினமும் சேர்த்துக் கொண்டால் அஜீரணக் கோளாறுகளை அகற்றி, செரிமானத்தை அதிகரித்து, நல்ல உடல் பசியை ஏற்படுத்துகிறது.
புடலங்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், மலச்சிக்கல், மூலநோய்கள் குடல் புண், வயிற்றுப் புண், தொண்டை புண் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.தினமும் உணவில் புடலங்காயை சேர்த்துக் கொண்டால், நம் உடம்பில் உள்ள நரம்புகள் புத்துணர்வு அடைந்து ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
புடலங்காயில் நீர்ச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால், நம் உடலின் தேவையற்ற உப்பு நீர் மற்றும் வியர்வையை சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது.
பெண்கள் புடலங்காயை அதிகமாக சேர்த்துக் கொண்டால், அவர்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், கருப்பைக் கோளாறுகள் மற்றும் கண் பார்வைகளை அதிகரிக்கச் செய்கிறது.
Average Rating