விஜய் நடிப்பில் “மெர்சல்” படத்தில் கவனிக்க வைத்த, இலங்கை நடிகை ஷனா மகேந்திரன்..!! (VIDEO)

Read Time:1 Minute, 47 Second

தளபதி விஜய் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் மெர்சல் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

இப்படத்தின் ஆரம்பத்திலேயே விஜய் ப்ரான்ஸ் நாட்டில் வந்து இறங்கியவுடன், அவரை ப்ரான்ஸ் போலிஸார் சந்தேகத்துடன் பார்ப்பார்கள்.

உடனே அவரின் உடையை அவிழ்த்து பரிசோதனை செய்வார்கள், பிறகு விஜய் டாக்டர் என்பதை தெரிந்துக்கொண்டு விட்டுவிடுவார்கள், அதன் பின் ஒரு இலங்கை பெண் ‘அண்ணா மன்னித்து விடுங்கள்.

அவர்களுக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன், உங்கள் உடையை பார்த்து அவர்கள் அப்படி நினைத்திருப்பார்கள்’ என்று ஆறுதல் கூற,

உடனே விஜய் ‘பரவாயில்லம்மா, கமல் சார், கலாம் சாருக்கே இதெல்லாம் நடக்கும் போது நாமெல்லாம் யார்?’ என்று சொல்வார்.

இந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது, இந்த காட்சியில் இலங்கை பெண்ணாக நடித்தது வேறு யாருமில்லை, இலங்கையில் வெளிவந்த மண் படத்தின் நாயகி ஷனா மகேந்திரன்.

இவர் இந்த ஒரு காட்சியில் வந்து சென்றாலும், அந்த காட்சி வசனங்கள் மிகவும் வலுவாக இருந்ததால் எல்லோர் மத்தியிலும் மிகவும் பிரபலமடைந்து வருகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சொர்க்கம் செல்ல, பெற்ற மகளை உயிருடன் சமைத்த கொடூர தாய்..!!
Next post பதட்டத்தின் சில அறிகுறிகள்..!!