அடுத்ததாக என்னவருமோ? எனக்கு பயமாக இருக்கிறது! பதறும் கீர்த்தி சுரேஷ்..!!
ரசிகர்களின் மனம் கவர்ந்த ட்ரீம் கேர்ள் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆரம்பத்தில் தமிழில் இவரது படங்களில் பெரிய இடத்தை கொடுக்காததால் சிவகார்த்திகேயனுடன் நடித்த படங்கள் அவரை முன்னிற்கு கொண்டுவந்தது.
கவனிக்கப்படும் நடிகையான அவர் தமிழ், தெலுங்கு என இரண்டலும் மார்க்கெட்டை பிடிக்க படங்களில் நடித்து வருகிறார். ஆனால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொடரி படம் பவருக்கு சில நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்தது.
சமூக வலைதளங்களில் கேலி, கிண்டல்கள், மீம்ஸ் என பறந்தது. சமீபத்திய பேட்டியில் இதை பற்றி கூறும் கீர்த்தி, மக்கள் ரசிக்கும் படியாக என நடிப்பு இருக்க வேண்டும் என செய்து வருகிறேன்.
தொடரியில் நான் நடித்ததை கலாய்த்தனர். அதை நான் முழுமையாக கவனித்தேன். அதற்கு பிறகு உடல் எடை அதிகரித்துவிட்டது என்றார்கள். இப்போது உடல் எடையை குறைத்து விட்டேன்.
இனி என்ன விமர்சனம் வரப்போகிறதோ? பயமாக தான் இருக்கிறது என அவர் கூறினார்.
Average Rating