இனி பல்லை காட்டினாலே பணம் கிடைக்கும்… ஏ டி எம் கார்டுக்கு டாட்டா..!!
Read Time:1 Minute, 9 Second
சீனாவின் ஜினான் நகரில் ஏ.டி.எம் களில் பணம் எடுக்கவும், அல்லது டெபாசிட் செய்யவும் கார்டு அவசியமில்லை. முகத்தை காட்டினாலே போதும்.இந்த வசதியை சீனாவின் விவசாய வங்கியே அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது இயந்திரம் வாடிக்கையாளரின் முகத்தை ஸ்கேன் செய்த பின்பு தனது தொலைபேசி எண்ணை பதிவு செய்து தேவையான பணத்தை பதிவு செய்ய வேண்டும். அதன்பின் இரகசிய எண்ணைப் பதிவிட்டு பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
ஆரம்ப நாட்களில் நாளொன்றுக்கு மூவாயிரம் யுவான்களை மட்டுமே தானியங்கி இயந்திரங்களில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும். இதுபோன்ற சுமார் 24 ஆயிரம் இயந்திரங்களை நிறுவிய பின்பு பணத் தொகை அதிகரிக்கப்படும் என வங்கிகள் தெரிவித்துள்ளது.
Average Rating