விஜய்காக பாட்டு பாடி 3 நாள் ஜுரத்தால் அவதிப்பட்ட நடிகை..!!
Read Time:1 Minute, 3 Second
விஜய் படம் என்றாலே பாடல்களுக்கு கொஞ்சம் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும். அவர் வேகமாக நடனமாடுவதற்கு ஏதுவாக இசையமைப்பாளர்களும் பாடல் கம்போஸ் செய்வார்கள்.
அப்படி வில்லு படத்தில் ‘ராம ராமா’ பாடலில் கோவை சாரளா ஹை பிட்சில் பாடியிருப்பார். “ஏ வில்லு வில்லு வில்லு வில்லு வரான் வில்லு.. ஏ நில்லு நில்லு நில்லு நில்லு தில்லிருந்தா எதிரே நில்லு” என குஷ்பு ஆடும் அந்த பகுதியை பாடியது கோவை சரளா தான்.
தொடர்ந்து ஹை பிட்சில் பாடியதால் அந்த பாடல் பாடிமுடித்த பிறகு 3 நாட்களுக்கு அவருக்கு ஜுரம் வந்துவிட்டதாம். இதை கோவை சரளா தற்போது ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Average Rating