`துருவ நட்சத்திரம்’ படக்குழுவில் இருந்து வெளியான புதிய தகவல்..!!

Read Time:1 Minute, 57 Second

கவுதம் மேனன் தற்போது விக்ரமை வைத்து `துருவ நட்சத்திரம்’ படத்தை உருவாக்குவதில் பிசியாக இருக்கிறார். அதேநேரத்தில் தாமதமாகியிருக்கும் தனுஷின் `எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் இறுதிக்கட்ட படபிடிப்பு சுமார் 15 நாட்கள் எடுக்கப்பட வேண்டி இருக்கிறது.

இரண்டு படங்களையும் முடித்த பிறகு இந்த இரு படங்களையும் சில வார இடைவெளியில் வெளியிட கவுதம் மேனன் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் `துருவ நட்சத்திரம்’ படத்தை மூன்று பாகங்களாக வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த இரு படங்களை முடித்த பிறகு கவுதம் மேனன் அடுத்ததாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 4 மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்களை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறாராம். தகவலின்படி புனித் ராஜ்குமார் மற்றும் அனுஷ்கா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதேநேரத்தில் அருண் விஜய்யின் 25-வது படத்தை கவுதம் மேனன் இயக்கவிருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். அது இதுவாக இருக்குமா அல்லது புதிய படமா என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தானேவில் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் போலீசார் முன் அடித்துக் கொலை..!!
Next post திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை: தமன்னா புகார்..!!