ராஜாங்கன யாயப்பகுதியிலுள்ள வீடொன்று உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் கொள்ளை
ராஜாங்கன யாயப்பகுதியிலுள்ள வீடொன்று உடைக்கப்பட்டு அங்கிருந்த பணம் மற்றும் நகைகள் உட்பட பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்ட நபர்களிருவரையும் பதின்நான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு தமுத்தேகம நீதிமன்ற நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார் நள்ளிரவு வேளையில் இடம்பெற்ற இத்திருட்டு சம்பவத்தில் மூன்று லட்சத்து முப்பதேழாயிரத்து எண்ணுhறு ரூபா பெறுமதியான பணம் நகைகள் மற்றும் பொருட்கள் களவாடப்பட்டுள்ளன என்றும் நாற்பத்துமூவாயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை சந்தேகநபர்கள் இருவரும் வங்கியொன்றில் அடகு வைத்துள்ளனரெனவும் மிகுதிப்பணமும் நகையும் வைக்கப்பட்டுள்ள இடம்பற்றி விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் தமுத்தேகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Average Rating