நான் இன்னும் மோசமாக மாறுவேன்- காயத்ரி ரகுமானின் அதிரடி டுவிட், அப்படி என்ன ஆனது..!!
பெண்கள் நடன கலைஞர்களில் அனைவராலும் முதலில் அறியப்படுபவர் கலா மாஸ்டர். அவரை தொடர்ந்து பிருந்தா, காயத்ரி ரகுராம் போன்றவர்கள் ரசிகர்களுக்கு மிகவும் பரிசயப்பட்டவர்கள்.
காயத்ரி ரகுராம் அண்மையில் BiggBoss என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரின் கோபத்துக்கும், திட்டிற்கும் ஆளானார். தற்போது இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார்.
இவர் தன்னுடைய டுவிட்டரில், நான் கொடூரமானவள் என்று நினைப்பவர்களுக்கு நான் இன்னும் மோசமாக மாறுவேன். எனக்கு என்ன கிடைக்கிறதோ அதை தான் திரும்பி கொடுப்பேன் என பதிவு செய்துள்ளார். எதனால் இப்படி பதிவு செய்துள்ளார் அப்படி என்ன ஆனது என்பது தெரியவில்லை.