மதுரையில் திருமண ஆசை காட்டி மாணவி பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது..!!
Read Time:1 Minute, 12 Second
மதுரை பீ.பி.குளம் மருதுபாண்டியன் நகரைச் சேர்ந்த 13 வயது சிறுமி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தினமும் பள்ளிக்கு செல்லும்போது அந்த பகுதியில் கறிக்கடையில் வேலை பார்த்து வந்த காதர் (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. மாணவியை திருமணம் செய்து கொள்வதாக காதர் கூறினார்.
இதனை மாணவி நம்பி பல இடங்களுக்கு அவருடன் சென்றார். அப்போது காதர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மாணவியுடன் பேசுவதை காதர் தவிர்த்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விசாரணை நடத்தி திருமண ஆசை காட்டி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக காதரை கைது செய்தனர்.
Average Rating