சூர்யா – கார்த்தி கூட்டணியில் இணைந்த ப்ரியா பவானி ஷங்கர்..!!

Read Time:1 Minute, 52 Second

கார்த்தி நடிப்பில் `தீரன் அதிகாரம் ஒன்று’ வருகிற நவம்பர் 17-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், கார்த்தி அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கிறார்.

நடிகர் சூர்யாயின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று பூஜையுடன் ஆரம்பமானது. தொடர்ந்து ஐந்து நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து தென்காசியில் 40 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறுகிறது.

டி.இமான் இசையமைக்கும் இப்படத்தில் கார்த்தி ஜோடியாக சாயிஷா சய்கல் நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில், மேயாத மான் படத்தில் நடித்த ப்ரியா பவானி ஷங்கரும் இந்த படத்தில் ஒப்பந்தமாகி இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதனை ப்ரியா அவரது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

ஏற்கனவே கோகுல் இயக்கத்தில் ஜுங்கா படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக சாயிஷா நடித்து வரும் நிலையில், ப்ரியா பவானி ஷங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், கார்த்தி ஜோடியாக இருவரும் இணைந்து நடிப்பதாக வெளியான தகவலால் இந்த இரு படங்களின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓவியங்களை ஸ்கான் செய்யுங்கள்! வரலாற்றை ஸ்மார்ட் PHONE காண்பிக்கும்..!!
Next post நொறுக்குத்தீனிப் பழக்கம் நோயை வரவழைக்குமா?..!!