சத்தமில்லாமல் நயன்தாராவை பின்பற்றும் அனுபமா..!!

Read Time:1 Minute, 46 Second

பிரேமம்” மலையாள படத்தில் பிரபலம் ஆனவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் ‘கொடி’ படத்தில் நடித்தார். தற்போது தெலுங்கில் நடித்து வருகிறார். மீண்டும் தமிழில் நடிப்பது குறித்து கேட்டபோது பதில் அளித்த அவர்….

‘‘பிரேமம்’ படம் எனக்கு நல்ல அறிமுகத்தை தந்தது. ‘கொடி’ படத்துக்கு பிறகு தமிழில் சில கதைகள் வந்தன. அதில் நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடிப்பேன். சவாலான வேடங்கள் கிடைத்தால் நடிக்க தயாராக இருக்கிறேன்.

செய்தித்துறை தொடர்பாக படிக்க வேண்டும் என்பது எனது ஆசை. அதற்காக கல்லூரியில் சேர்ந்து படித்தேன். ஆனால் நடிக்க வந்துவிட்டதால் அதை தொடர முடியவில்லை. தற்போது தெலுங்கில் நானியுடன் ஒருபடம் உள்பட 2 படங்களில் நடிக்கிறேன்.

நயன்தாரா கதை தேர்வு செய்து நடிப்பது வித்தியாசமாக இருக்கும். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரைப்போல கதையை தேர்வு செய்து நடிக்க வேண்டும். விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் நடிக்கும் ஆசை இருக்கிறது. தமிழ் சினிமாவில் நிறைய நல்ல படங்களில் நடிக்க வேண்டும்.

இதற்காக சென்னை வந்து கதை விவாதத்தில் பங்கேற்று வருகிறேன். விரைவில் அடுத்த தமிழ் படத்தில் நடிப்பேன்’’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கஜோலை காப்பாற்ற வந்த கமல்..!!
Next post காதலிக்க மறுத்த பெண்… குடும்பத்துடன் தீயிட்டு கொளுத்திய காதலன்..!!