தென்கொரியாவில்; அமெரிக்க மாட்டிறைச்சி இறக்குமதி எதிர்ப்பு பேரணியில் 80ஆயிரம் பேர்
Read Time:1 Minute, 16 Second
அமெரிக்காவில் உள்ள மாடுகளை கடந்த காலங்களில் கோமாரி நோய் தாக்கியதால், அமெரிக்க மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இப்போது அந்த தடை விலக்கி கொள்ளப்பட்டது. இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு தென்கொரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவு மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் 80 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இதற்கிடையில் இந்த போராட்டத்துக்கு ஆதரவாகவும், இறக்குமதிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மந்திரிகள் சிலர் பதவி விலகினார்கள். அவர்களின் ராஜினாமா கடிதங்களை அதிபர் லீ மியுங் ஏற்றுக்கொண்டார். பேரணியின் போது சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படாமல் தடுப்பதற்காக 21 ஆயிரம் போலீஸ்காரர்கள் பாதுகாப்ப்புக்காக நிறுத்தபட்டனர்.
Average Rating