ஏமன் நாட்டில் கூட்ட நெரிசலில் சிக்கி 24 பேர் பலி
Read Time:1 Minute, 8 Second
அரபு நாடுகளில் ஒன்றான ஏமன் நாட்டில் வருகிற 20-ந் தேதி ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடக்கிறது. இதையொட்டி தேர்தல் பேரணி சனா நகரில் ஒரு ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் ஜனாதிபதி அலி அப்துல்லா சலே கலந்து கொண்டு பேசினார். அவர் பேச்சை கேட்பதற்காக ஆயிரக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் ஸ்டேடியத்துக்குள் நுழைய முயன்றனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 24 பேர் பலியானார்கள். 50 பேர் காயம் அடைந்தனர்.
இறந்தவர்களின் உடல்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. காயம் அடைந்தவர்களும் அங்கே கிடந்தனர். மீட்புக்குழுவினர் அந்த இடத்துக்கு விரைந்து சென்று உடல்களை அப்புறப்படுத்தினர். சலே, 1978-ம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக இருக்கிறார். 64 வயதான அவர் முன்னாள் ராணுவ தளபதி ஆவார்.