அநுராதப்புரத்தில் குண்டுகள் மீட்பு
Read Time:1 Minute, 15 Second
அநுராதபுரம் நகரத்தின் மத்தியில் பிரதான பஸ்தரிப்பிடம் ஒன்றுக்கு அருகாமையில் குப்பை போடும் தகரபரல் ஒன்றுக்குள் பொதி செய்யப்பட்ட நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படும் நேரகணிப்பு குண்டு ஒன்று நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டது பொதி ஒன்றுக்குள் இரண்டு சப்பாத்துகளில் நிரப்பப்பட்ட நிலையிலேயே இக்குண்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. வர்த்தகர் ஒருவர் அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே அவ்விடத்துக்கு பொலிஸார் விரைந்து சென்று குண்டை செயலிழக்க செய்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது சுமார் ஒன்றரை கிலோ கொண்ட இந்த குண்டு வெடித்திருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Average Rating