டி.வி. நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் மவுசு சில நாட்கள் தான்: இனியா..!!

Read Time:1 Minute, 26 Second

சமீபத்தில் தொலைக்காட்சியில் நடந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் ஓவியாவுக்கு சினிமா மார்க்கெட் சூடு பிடித்திருக்கிறது. அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள். இதுகுறித்து இனியாவிடம் கேட்டபோது….

“என்னையும் ‘பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி 4 முறை அழைத்தார்கள். அதில் பங்கேற்க விருப்பம் இல்லை என்று தெரிவித்துவிட்டேன். இதனால் அதில் பங்கேற்கவில்லை.

பிக்பாஸ் டி.வி நிகழ்ச்சியில் மூலம் கிடைக்கும் மவுசு எல்லாம் சில நாட்கள் தான். அதன்பிறகு பழைய இடத்துக்கு நிலைமை திரும்பிவிடும்” என்று கூறியுள்ளார்.

‘இனியா சொன்னது சரியாக கூட இருக்கலாம். என்றாலும், இவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேர்ந்து இருந்தால் இப்போது ‘ஒரு ரவுண்டு’ வந்திருக்கலாம். மவுசு குறையும் வரை பெரிய தொகையை குவித்து இருக்கலாம்’ என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீட்டிலேயே முகத்திற்கு மசாஜ் செய்வது எப்படி?..!!
Next post 62 வயதில் தன் மூன்றாவது குழந்தைக்கு தந்தையாக போகும் Mr. Bean..!!