மன்னாரில் இயல்பு நிலை நேற்று பாதிப்பு
Read Time:59 Second
மன்னாரில் பல பகுதிகளிலும் நேற்று இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருந்தது சுட்டுக் கொலை செய்யப்பட்ட மன்னார் மாவட்ட ஈ.பி.டி.பி உதவி அமைப்பாளர் ராமையாதேவர் மோகனின் இறுதி அஞ்சலி நிகழ்வுகளை ஒட்டியே மன்னாரில் நேற்றுக் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டது என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு வர்த்தக நிலையங்கள் வங்கிகள் பாடசாலைகள் அரச தனியார் நிறவனங்கள் போன்றன இயங்கவில்லை போக்குவரத்துகளும் ஸ்தம்பிதமடைந்திருந்தது மோகனின் இறுதி நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர் என்று தெரிவிக்கப்படுகிறது.
Average Rating