வெள்ளை நிறமாக மாறி செத்து மடியும் காக்கைகள்… அதிர வைக்கும் மர்மத்தால் பீதி..!!

Read Time:2 Minute, 6 Second

அஸ்ஸாமில் காக்கைகள் திடீரென வெள்ளை நிறமாக மாறுவதும் சிறிது நேரத்தில் கண்பார்வை பாதிக்கப்பட்டு கொத்து கொத்தாக செத்து விழுவதும் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தின் ஜதிங்கா என்ற இடத்துக்கு வந்து சேரும் பறவைகள் மர்மமான முறையில் கொத்து கொத்தாக செத்து விழுகின்றன. இது பறவைகளின் தற்கொலை பிரதேசமாக கூறப்படுகிறது.

ஜதிங்காவில் மட்டுமே பறவைகள் செத்து விழுவதற்கான காரணம் குறித்து இன்னமும் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் அஸ்ஸாமில் மற்றொரு அதிர்ச்சி சம்பவமும் அரங்கேறியுள்ளது.

சோனிட்பூர் மாவட்டம் போர்பாகியா கிராமத்தில் சில நாட்களுக்கு முன்னர் காகங்களின் கருப்பு நிறம் திடீரென மாறியிருக்கிறது. கருப்பு நிறம் ஆங்காங்கே வெள்ளை நிறமாகிக் கொண்டே இருந்திருக்கிறது.

இந்த நிறம் மாறிய நிலையில் காக்கைகளால் தொடர்ந்து பறக்க முடியாமல் போயிருக்கிறது. இதற்கு காரணம் நிறம் மாற மாற கண்பார்வையும் பறிபோயுள்ளது. இந்த நிறமாற்றம் நிகழ்ந்த சிறிது நேரத்திலேயே காக்கைகள் கொத்து கொத்தாக செத்து விழுந்திருக்கின்றன.< தற்போது இது தொடர்பாக மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்கள் குழு ஆய்வு நடத்தி வருகிறது. இந்த விநோத மரணங்களுக்கு காரணம் வைரஸ் தாக்குதலாக இருக்குமோ என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சூரியனில் மிகப்பெரிய ஓட்டை: நாசா கண்டுபிடிப்பு – வீடியோ..!!
Next post முட்டைக்கோஸ் இலையை வைத்து இப்படி செய்தால் அற்புதம் நடக்கும்..!!