வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற 86 வயது பாட்டி… கண்கலங்க வைக்கும் காரணம்..!!

Read Time:2 Minute, 39 Second

வாஷிங்டனில் 86 வயது பாட்டி ஒருவர் வங்கியை கொள்ளையடிக்க முயன்று இருக்கிறார். தற்போது இவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.காலையில் மக்கள் கூட்டம் இருக்கும் நேரம் பார்த்து சரியாக உள்ளே வந்த அந்த பாட்டி துப்பாக்கியை காட்டி பணத்தை கேட்டு இருக்கிறார். இவரால் சரியாக நடக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் அந்த வங்கியை கொள்ளை அடிக்க முயன்றதற்கு முக்கியமான காரணம் ஒன்றும் சொல்லி இருக்கிறார். அதேபோல் அவர் வங்கியை கொள்ளையடிக்க முயன்ற போது மற்றொரு காமெடியான சம்பவமும் நடந்துள்ளது.

வங்கியில் கொள்ளையடிப்பு சம்பவத்தினை அறிந்து பொலிசார் விரைந்து வந்தனர். குறித்த பாட்டி கையில் வைத்திருந்த துப்பாக்கி விலங்கு வேட்டைக்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கியாகும். அங்கு வந்த பொலிசார் அந்த பாட்டிக்கும் அங்கே இருந்தவர்களுக்கும் எதுவும் ஆகாத வகையில் அவரை கைது செய்தனர். மேலும் அந்த பாட்டி இதன் காரணமாக அதே இடத்தில் மயங்கி விழுந்தார். பின் உடனடியாக அந்த பாட்டிக்கு முதல் உதவி செய்யப்பட்டு பின் விசாரணை செய்யப்பட்டார்.

பின்னர் பாட்டியிடம் இருந்த துப்பாக்கியினை வாங்கி சோதனை செய்த பொலிசாருக்கு பயங்கர அதிர்ச்சி ஏற்பட்டது. காரணம் பாட்டியின் துப்பாக்கியிலும், அவரது கைப்பையிலும் ஒரு குண்டுகள் கூட இல்லை என்பதே.

கை தவறி கூட யாரும் மரணம் அடைந்துவிடக்கூடாது என்பதற்காகவே அந்த பாட்டி குண்டுகள் இல்லாமல் வந்ததாகவும், மேலும் இந்த சம்பவத்திற்கு முதல் நாள் அந்த வங்கியில் பாட்டியின் கணக்கிலிருந்து 400 டொலர் அபராதமாக வங்கி வசூலித்துள்ளது. இந்த அபராத தொகையினை மீண்டும் வசூலிக்கவே இவ்வாறு செய்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாம்பு வைத்து பயமுறுத்தியவரை பழிவாங்கிய சன்னி லியோன்..!! (வீடியோ)
Next post அதிகாலையில் உடலுறவு கொண்டால் காய்ச்சல் வராதாம்… கேட்கவே புதுசா இருக்கா?..!!