ரஜினி அரசியலுக்கு வரக் கோரி கிடா வெட்டு
நடிகர்கள் கட்சி ஆரம்பித்து ரசிகர்களை தொண்டர்களாக மாற்றி வரும் காலமிது. நடிகர்கள் விஜயகாந்த், சரத்குமார், ஆகியோர் கட்சி ஆரம்பித்து விட்டனர். தற்போது நடிகர் கார்த்திக் புது கட்சியை ஆரம்பித்துவிட்டார். அதே போல தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும் கட்சி ஆரம்பிக்கவுள்ளனர். ஆனால் ரஜினி ரசிகர்கள் தான் நீண்ட நாட்களாக காத்துக் கொண்டுள்ளனர். அவ்வப்போது கட்சி ஆரம்பிக்கச் சொல்லி ரஜினிக்கு பல்வேறு வகைகளிலும் கோரிக்கைகளை வைத்தும் வருகின்றனர். இதற்காக வித்தியாசமான நேர்த்தி கடன்களையும் செய்து வருகின்றனர். இந் நிலையில் ரஜினி விரைவில் அரசியலுக்கு வர வேண்டும் என்று ராஜபாளையத்தில் உள்ள ரஜினி ரசிகர் மன்றத்தினர் கிடா வெட்டி, பொங்கல் வைத்து பூஜை செய்தனர். அவர் விரைவில் அரசியலுக்கு வர வேண்டும் என்று பேச்சியம்மன் கோயிலில் விசேஷ பூஜைகள் நடத்தினர். பின்னர் ஆடுகளை பலியிட்டு சிறப்புகள் பூஜை நடத்தப்பட்டன. 10க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு அம்மனுக்கு பொங்கல் படைக்கப்பட்டது. இதி்ல் ஏராளமான ரஜினி ரசிகர்கள் பங்கேற்றனர்.
Average Rating