பொது நிகழ்ச்சிக்கு மகளை அழைத்துச் சென்று கண்ணீர் விட்ட ஐஸ்வர்யாராய்..!!

Read Time:2 Minute, 6 Second

இந்தி நடிகை ஐஸ்வர்யாராய் தனது தந்தையின் பிறந்த நாளை யொட்டி, மருத்துவ உதவி வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினார். இதில், உதட்டு பிளவுடன் பிறந்த 100 குழுந்தைகளுக்கு அறுவை சிகிச்சைக்கு ஐஸ்வர்யாராய் உதவினார். இதை அந்த குழந்தைகளுடன் சேர்த்து கேக் வெட்டி கொண்டாடினார்.

இதற்கு தனது மகள் ஆரத்யாவையும் ஐஸ்வர்யாராய் தன்னுடன் அழைத்து வந்தார். அப்போது அங்கு குவிந்த போட்டோ கிராபர்கள் தாய்-மகளை விதம்விதமாக புகைப்படம் எடுப்பதற்கு போட்டி போட்டனர். இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக அங்கு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனால் ஐஸ்வர்யாராய் வேதனை அடைந்தார்.

“கூச்சல் போடாதீர்கள் குழந்தைகள் பயப்படுகிறார்கள். புகைப்படம் எடுத்தது போதும்” என்றார். ஆனால் போட்டோ கிராபர்கள் கேட்கவில்லை. பலமுறை அவர் சொல்லியும் பயன் இல்லை. இதனால் ஐஸ்வர்யாராய் உணர்ச்சி மிகுதியால் கண்ணீர் விட்டார்.

இந்த சம்பவத்தையடுத்து, மகள் ஆரத்யாவை இனி பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வது இல்லை என்று முடிவு செய்துள்ளார். ஐஸ்வர்யாராய் இதுவரை, எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும், மகளையும் உடன் அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்து இருந்தார். ‘கேன்ஸ்’ திரைப்பட விழாவுக்கும் மகளுடன் சென்றார். இனி தன்னால், தனது மகளுக்கு இது போன்ற பிரச்சினைகள் வரக்கூடாது என்பதால் இந்த முடிவை ஐஸ்வர்யாராய் எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண் இமைக்கும் நேரத்தில் இந்த பெண் செய்த வேலையை பாருங்கள்..!! (வீடியோ)
Next post ஆடைகளை களைந்து சித்திரவதை: அம்பலமான சிறை அதிகாரிகளின் வெறிச்செயல்..!! (வீடியோ)