திருமணமான இரண்டு நாளில் தெரிந்த மணமகளின் சுயரூபம்… பரிதாபத்தில் புதுமாப்பிள்ளை..!!
உத்திரகாண்ட் மாநிலத்தில் திருமணமான இரண்டு நாட்களில் மணமகள் நகைகளுடன் எஸ்கேப் ஆனதால் மணமகன் குடும்பம் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கியின் குவான் ஹீடி கிராமத்தை சேர்ந்த விவசாயி அஜய் தியாகி, இவருக்கும் டேராடூனை சேர்ந்த கயா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயமானது. இவர்களது திருமணம் கடந்த 22ம் திகதி நடைபெற்றுள்ளது.
மணமகளுக்கு மணமகன் வீட்டு சார்பாக தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் அணிவித்திருந்தனர். திருமணமும் முடிந்தது. இரண்டு நாட்கள் எந்தவொரு சந்தேகமின்றி மிகவும் நன்றாக சென்றுள்ளது அவர்களின் வாழ்க்கை.
இரண்டு நாட்களுக்கு பின்பு தனது உடல்நிலை சரியில்லை என்று புதுப்பெண் கூற உடனே அவரது கணவர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வீடு திரும்புகையில், குளிர்பானம் ஆர்டர் செய்த போது எஸ்கேப் ஆகியுள்ளார்.
புது மனைவியின் சூட்சமம் தெரியாமல் கணவர் 4 மணி நேரமாக அவரைத் தேடியுள்ளார். இறுதியில் பொலிசில் புகார் அளித்துள்ளார்
Average Rating