பாலியல் விளையாட்டால் நடந்த விபரீதம்… அந்தரங்க உறுப்பை துண்டித்த இளம் பெண்…!!
ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த யுவதியொருவர், நபர் ஒருவரின் ஆணுறுப்பை வெட்டித் துண்டித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். ஆனால், பாலியல் விளையாட்டொன்றே இந்த விபரீதத்துக்கு காரணமாகியதாக ஆணுறுப்புத் துண்டிக்கப்பட்ட நபர் கூறுகிறார்.
40 வயதான இசைக்கலைஞரான சேர்ஜியோ என்பவர் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், அவரின் அந்தரங்க உறுப்பை பிரெண்டா பராட்டினி எனும் 26 வயதான யுவதி வெட்டியதாக முன்னர் தகவல் வெளியாகியிருந்தது.
ஆர்ஜென்டீனாவின் கோர்டோபா நகரிலுள்ள பிரெண்டா பராட்டினியின் வீட்டில் கடந்த வாரம் இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும், சேர்ஜியோவும் பிரெண்டா பராட்டினியும் பாலியல் விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்தபோதே தவறுதலாக இச்சம்பவம் இடம்பெற்றதாக சேர்ஜியோவின் சட்டத்தரணி நேற்றுமுன்தினம் நீதிமன்றில் வாதாடுகையில் கூறினார்.
அவ்வேளையில் மேற்படி இருவரின் கண்களும் கட்டப்பட்டிருந்ததாகவும் சட்டத்தரணி தெரிவித்தார். ஆனால், பாலியல் வன்முறையிலிருந்து தன்னை தற்காத்துக்கொள்வதற்காகவே தான் இவ்வாறு செய்ததாக பிரெண்டா பராட்டினி தெரிவித்துள்ளார்.
தனது வீட்டுக்குள் சேர்ஜியோவை அனுமதித்திருந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சேர்ஜியோவும் பிரெண்டாவும் ஏற்கெனவே அறிமுகமானவர்கள், ஆனால், அவர்களுக்கிடையில் காதல் உறவு எதுவும் இருந்ததா என்பது தெரியவில்லை.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரெண்டா பிராட்டினி உளவியல் சோதனைக்கு உட்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Average Rating