கணவருடன் வந்து நடிகை மோகினி விவாகரத்து மனு; ஒருமித்த கருத்துடன் பிரிந்து செல்கிறோம்
Read Time:1 Minute, 9 Second
ஈரமான ரோஜாவே உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகை மோகினி. இவருக்கும் டி.கே. பரத் என்பவருக்கும் கடந்த 2003-ம் ஆண்டு திருமணம் நடை பெற்றது. கடந்த சில காலமாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளனர். மோகினி குடும்ப நல கோர்ட்டுக்கு வந்தார். அவரது கணவரும் அப்போது அவருடன் வந்தார். அங்குள்ள பதிவு அலுவலகத்தில் மோகினி ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் மோகினி எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இருவரும் பிரிந்து வாழ்வது என்று ஒருமித்த பரஸ்பர முடிவு செய்துள்ளாம். எனவே எங்களுக்கு விவா கரத்து வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த மனு இன்னும் ஒரிரு நாளில் விசாரணைக்கு வருகிறது.
Average Rating