நடிகை ஊர்வசி விவாகரத்து கேட்டு மனு
விவாகரத்து கேட்டு நடிகை ஊர்வசி குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். முந்தானை முடிச்சு மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஊர்வசி. ஏராளமான இந்தி, மலையாள படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் மலையாள பட டைரக்டர் மனோஜ் கே. ஜெயினுக்கும் சில ஆண்டு களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த நிலையில் இருவ ருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள குடும்ப நல கோர்ட்டில் நடிகை ஊர்வசி கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள் ளார். மனுவில் அவர் கணவர் சித்ரவதை செய்கிறார் எங்களுக்குள் கருத்து வேறு பாடு உள்ளது. எனவே கணவரிடம் இருந்து விவா கரத்து வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனு நேற்று மாலை சென்னை முதன்மை குடும்ப நல நீதிபதி விமலா முன் விசாரணைக்கு வந்தது. மனுமீதான விசா ரணையை நீதிபதி 14.8.2008க்கு தள்ளி வைத்தார். இந்த வழக்கில் மனோஜ் கே. ஜெயினுக்கு சம்மன் அனுப்பப்படுகிறது.
Average Rating