ரெயிலில் அனாதையாக கிடந்த அல்-கொய்தா ஆவணங்கள்; லண்டனில் பரபரப்பு
Read Time:55 Second
ஈராக் பாதுகாப்பு படைகள் பற்றியும், அல்-கொய்தா தீவிரவாத இயக்கம் பற்றியும் இங்கிலாந்து உளவுத்துறை ஏராளமான ரகசிய தகவல்களை திரட்டி வைத்துள்ளது. இந்த ரகசிய தகவல்கள் அடங்கிய ஆவணங்களுடன் ஒரு உளவுத்துறை அதிகாரி, லண்டனில் ரெயிலில் பயணம் செய்தார். அவர் ஞாபகமறதியாக அந்த ஆவணங்களை ரெயிலிலேயே விட்டு சென்று விட்டார். அதை பயணி ஒருவர் எடுத்து, பி.பி.சி. தொலைக்காட்சி நிறுவனத்திடம் ஒப்படைத்தார். அச்செய்தியை பி.பி.சி. ஒளிபரப்பியதால், இங்கிலாந்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆவணங்கள் தவற விடப்பட்டது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
Average Rating