ஈரானில் 8 பேருக்கு தூக்கு தண்டனை
Read Time:1 Minute, 6 Second
ஈரானில் கற்பழிப்பு, கொலை ஆகிய குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 8 பேர் புதன்கிழமை தூக்கிலிடப்பட்டதாக, அந்நாட்டு அரசு பத்திரிகை தெரிவித்துள்ளது. அவர்கள் அனைவரும் ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்கு வடக்குப் பகுதியில் உள்ள இவின் சிறையில் தூக்கிலிடப்பட்டனர். 5 பேர் கொலை குற்றத்துக்காகவும், 3 பேர் சிறுமியை கற்பழித்தக் குற்றத்துக்காகவும் தூக்கிலிடப்பட்டனர். இவர்களில் 6 பேர் 34 வயதுக்குக் குறைவானர்கள். இந்த ஆண்டு மட்டும் அங்கு இதுவரை 63 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். ஈரானில் கொலை, கற்பழிப்பு, ஆயுதங்களை வழிப்பறி செய்தல், மனிதர்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் ஆகிய குற்றங்களுக்கு தூக்குத் தண்டனை அளிக்கப்படுகிறது.
Average Rating