த்ரில்லர் படத்தில் ஜெய்யுடன் ஜோடி சேரும் மூன்று நாயகிகள்..!!

Read Time:1 Minute, 42 Second

சினிஷ் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகி இருக்கும் பலூன் படம் வருகிற டிசம்பர் 29-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தில் ஜெய் ஜேதடியாக அஞ்சலி, ஜனனி ஐயர் நடித்துள்ளனர்.

அடுத்ததாக ஜெய் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் கலகலப்பு-2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதுதவிர நிதின் சத்யா தயாரிப்பாளராக அறிமுகமாகும் ஜருகண்டி படத்தில் நடிக்கவும் ஜெய் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தை பிச்சுமணி என்பவர் இயக்குகிறார்.

இந்நிலையில், ஜெய்யின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை நடிகை ராய் லெக்‌ஷ்மி வெளியிட்டுள்ளார். விமல் – சனுசா நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற எத்தன் படத்தை இயக்கிய சுரேஷ் இந்த படத்தை இயக்கவிருக்கிறார். இதில் ஜெய் ஜோடியாக ராய் லெக்‌ஷ்மி, வரலட்சுமி சரத்குமார், கேத்ரின் தெரசா நடிக்கின்றனர்.

காதல் கலந்த த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்த படம் பாம்பு பற்றிய கதை என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் ஜெய் ஒரு ஐடி பொறியாளராக நடிப்பதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரியில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்திய கேப்டன் கோலிக்கு அடுத்த வாரம் டும் டும் டும்?..!!
Next post இறப்பு சான்றிதழ் பெற தாமதமானதால் குழந்தையின் உடலை பிரிட்ஜில் வைத்த தாய்..!!