வவுனியாப் பகுதியில் இரண்டு படையினர் சுட்டுக்கொலை
Read Time:1 Minute, 3 Second
வவுனியா பறையனாளங்குளம் மதவாச்சி பிரதான வீதியில் உள்ள இராணுவக் காவலரண் மீது நேற்றுமுன்தினம் பிற்பகல் 12.50 மணியளவில் விடுதலைப்புலிகளால் திடீரென மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் துப்பாக்கி பிரயோகத்தில் இராணுவத்தினர் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். சம்பவமானது அப்பகுதியி;ல் உள்ள பற்றை ஒன்றுக்குள் பதுங்கியிருந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர் ஒருவர் ரி56 ரகத் துப்பாக்கியால் இராணுவத்தினரை நோக்கி சுட்டார் என்று படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் இராணுவத்தினர் தேடுதல் மேற்கொண்டு வருகின்றனர் என்று படைத்தரப்பு மேலும் தெரிவிக்கிறது.
Average Rating