படைத்தரப்பினரின் தாக்குதல்களால் மேமாதத்தில் வடக்கில் 68 பேர் பலி -புலிகளின் சமாதான செயலகம் தெரிவிப்பு
Read Time:1 Minute, 17 Second
படையினரின் தாக்குதல்கள் காரணமாக கடந்த மேமாதம் தமிழர் தாயகபிரதேசத்தில் 68 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர் அத்துடன் 44 பேர் கடத்தி செல்லப்பட்டுள்ளனர். இத்தகவலை விடுதலைப்புலிகளின் சமாதான செயலகம் விடுத்துள்ளது அந்த மாதாந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளவை வருமாறு படையினரின் ஆழஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் வன்னியிலேயே அதிகமான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் கொல்லப்பட்டவர்களில் கிளைமோர் தாக்குதலில் 5சிறுவர்களும் படையினரின் வான்தாக்குதலில் 2சிறுவர்களும் அடங்குவர். யாழ்ப்பாணம் மண்டைதீவுக்கு அண்மையாகவுள்ள சிறுதீவு தாக்குதலை தொடர்ந்து குடாநாட்டில் படையினர் மேற்கொண்ட ஷெல்தாக்குதலில் ஆறுபொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று செயலகம் தெரிவிக்கிறது.
Average Rating