புலிகளின் எல்லாளன் படைப்பிரிவை சுற்றிவளைக்க மூன்று விஷேட குழுக்கள் நியமிப்பு -திவயின நாளேடு தெரிவிக்கிறது
Read Time:1 Minute, 1 Second
கொழும்பில் பல இடங்களில் இயங்கி வருவதாக தெரிவிக்கப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் எல்லாளன் படைப்பிரிவினரைக் கைதுசெய்ய விஷேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது. சிலகாலங்களுக்கு முன்னர் எல்லாளன் படைப்பிரிவின் செயற்பாடுகளை சித்தரிக்கும் வகையிலான துண்டுப்பிரசுரங்கள் அச்சிட்ட அச்சகம் மற்றும் சந்தேகநபர்களை ரகசிய புலனாய்வு பிரிவினர் கைது செய்திருந்தனர். குறித்த சந்தேக நபர்களிடமிருந்து கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையிலேயே இத்தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக திவயின மேலும் தெரிவிக்கிறது.
Average Rating