எமதர்மராஜா கூறியுள்ள மரண ரகசியங்கள் என்ன தெரியுமா? ..!!

Read Time:3 Minute, 0 Second

நாம் நிரந்திரமாக வாழப்போவது இல்லை என்பதையும், என்றாவது ஒரு நாள் மரணத்தை தழுவுவோம் என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். பணக்காரனாக இருந்தாலும் சரி ஏழையாக இருந்தாலும் சரி அனைவருக்கும் மரணம் வந்தே தீரும்.

மரணம் பற்றிய பேச்சு வரும் போதெல்லாம் அதனை பற்றிய உரையாடலில் சுவாரஸ்யம் அதிகரிக்கும். அதற்கு காரணம் அனைவருக்கும் அதனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையே.

ஆம், மரணத்தின் பின்னால் மறைந்திருக்கும் ஆழமான ரகசியங்களை பற்றி இங்கு படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

பழங்கால சமயத்திரு நூல்களின் படி, மரணம் மற்றும் ஆத்மா பற்றிய ரகசியங்களை நாச்சிகேட்டா என்ற குழந்தையும் எமதர்மராஜனும் கலந்துரையாடியுள்ளனர்.

நாச்சிகேட்டாவின் மூன்று வரங்கள் எமதர்மராஜனை சந்திக்க நாச்சிகேட்டா சென்ற போது, அவரிடம் மூன்று வரங்களை அவன் கேட்டான். அதில் மூன்றாவது வரம் மரணம் மற்றும் ஆத்மாக்யன் (ஆத்மாவின் அறிவு) பற்றி தெரிந்து கொள்வது.

அவனுடைய கடைசி வரத்தை நிறைவேற்ற எமதர்மராஜன் விரும்பவில்லை. ஆனால் அந்த குழந்தையோ பிடிவாதமாக இருந்தது. அதனால் மரணத்தை பற்றிய ரகசியங்களையும், மரணத்திற்கு பிறகு என்ன நடக்கும் என்பதையும் அவனிடம் தெரிவிக்க எமதர்மராஜன் சம்மதித்தார்.

ஆத்மா மரணத்திற்கு பிறகு ஒரு மனிதனுடைய ஆன்மாவிற்கு அழிவில்லை என்பதை எமதர்மராஜன் கூறினார். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், ஆன்மாவின் அழிவிற்கும் உடலுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. ஆன்மாவிற்கு பிறப்போ இறப்போ கிடையாது.மரணத்திற்கு பிறகு, ஒரு மனிதன் ஜனன மரண சுழற்சியை முடிக்கிறான். அப்படியானால் பிரம்ம ரூபம் என அறியப்படும், ஜனன மரண சுழற்சியில் இருந்து அவன் விடுபடுகிறான்.

நம்பிக்கை இல்லாதவர்களும், நாத்திகவாதிகளும் மரணத்திற்கு பிறகு அமைதியை தேடி அலைவார்கள் எனவும் எமதர்மராஜன் கூறியுள்ளார். வெளிப்படையாக கூற வேண்டுமானால் அவர்களின் ஆன்மா அமைதியை தேடி அலையும்.நாச்சிகேட்டாவிடம் எமதர்மராஜன் கூறிய மரணத்தை பற்றிய சில ரகசியங்கள் தான் இவைகள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்த அண்ணன் தங்கை பாசத்தை பார்த்தால் நம் கண்களில் கூட கண்ணீர் வரும்..!! (வீடியோ)
Next post ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்..!!