குண்டுகள் செயலிழக்கப் பட்டதால் களுவாஞ்சிக்குடி வெல்லாவெளியில் பதற்றம்
மட்டகளப்பு களுவாஞ்சிக்குடி வெல்லாவெளி பிரதேசங்கள் நேற்றுக்காலை குண்டுசத்தங்களால் அதிர்ந்தன இப்பாரிய குண்டு சத்தத்தால் அன்றாட கடமைகளில் ஈடுபட்டிருந்த இப்பகுதி மக்கள் சிதறி ஓடினர். வர்த்தக நிலையங்கள், பொதுசந்தைகள் இழுத்து மூடப்பட்டன சுமார்அரைமணிநேரம் சகல நடவடிக்கைகளும் ஸ்தம்பித நிலைஅடைந்தன நேற்று முன்தினம் முற்பகல் 11.30 மணியளவில் இந்தபாரிய குண்டுசத்தம் கேட்டதுடன் நகரையும் அதிரவைத்தது இவ்விடயம் பற்றி பாதுகாப்பு தரப்புடன் தொடர்பு கொண்டு கேட்டபோது நேற்றுவரை படுவான்கரைப் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கிளைமோர் குண்டுகள் வெல்லாவெளி பொலிஸ்நிலைய மைதானத்தில் வைத்து குண்டு செயலிழக்கும் பிரிவினரால் செயலிழக்கப்பட்டது அதனால் இச்சத்தம் கேட்டதென தெரிவிக்கப்படுகிறது. விடயம் அறிந்த வெல்லாவெளி களுவாஞ்சிக்குடி பிரதேசமக்கள் தமது வழமையான நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்ததுடன் பதற்றம் நீங்கி வர்த்தக நிலையங்களை திறந்து தமது வியாபாரங்களை தொடங்கினர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
Average Rating