ஹீரோயினாக மறைந்த பிரபல நடிகையின் மகள்! புதுவரவு..!!
Read Time:1 Minute, 0 Second
நடிகை கல்பனா கடந்த வருடம் பட ஷூட்டிங்காக செல்லும் இடத்தில் காலமானார். தமிழ், மலையாளம் என பல படங்களில் நடித்தவர். பிரபல நடிகையான இவர் நடிகை ஊர்வசியின் சகோதரி என்பது சிலர் அறிந்த ஒன்று.
கல்பனாவின் மகளான ஸ்ரீமயி குஞ்சியம்மாவும் அஞ்சு பெண்களும் என்ற படம் மூலம் ஹீரோயினாக இறங்கியுள்ளார். சினிமாவிற்காக தன் பெயரை ஸ்ரீ சங்க்யா என மாற்றியுள்ளார்.
தற்போது தனது பெரியம்மா கலா ரஞ்சனி மற்றும் சித்தி ஊர்வசியின் பாதுகாப்பில் இருந்து வருகிறாராம். இதுகுறித்து ஏற்கனவே வந்த தகவலை ஊர்வசி மறுத்திருந்தார்.
ஆனால் தற்போது அப்படத்தின் பிரஸ் மீட் மூலம் உறுதியாகியுள்ளது.
Average Rating