வெள்ளத்தினால் சேதமடைந்த வீடுகளை திருத்துவதற்கான கொடுப்பனவு 1இலட்சமாக அதிகரிப்பு
Read Time:1 Minute, 15 Second
வெள்ளதினால் சேதமடைந்த வீடுகளை திருத்துவதற்காக வழங்கப்பட்டு வந்த நஷ்டயீட்டு தொகை ஒருஇலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த நிவாரணஅமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரைகாலமும் சேதமடைந்த வீடுகளுக்கு அதிகக்கூடிய தொகையாக ஐம்பதாயிரம் ரூபாவே வழங்கப்பட்டுவந்ததாக கூறிய அமைச்சின் செயலாளர் ஏ.சீ.எம் ராஸிக் அமைச்சரவையில் கடந்தவாரம் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி சேதமடைந்த வீடுகளுக்கு ஒருஇலட்சம் ரூபாவரை வழங்கப்படும் என தெரிவித்தார். அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் சேதமடைந்த வீடுகளின் விபரங்கள் பிரதேச செயலாளர்கள் ஊடாக திரட்டப்பட்டு வருகிறது. ஊரிய விபரங்கள் கிடைத்ததும் சேதமடைந்த வீடுகளுக்கு துரிதமாக நஷ்டயீடு வழங்கப்படுமென அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
Average Rating