பிறந்த குழந்தையின் கழுத்தை நெரித்த மூதாட்டி.. எதற்காக தெரியுமா?..!!
Read Time:1 Minute, 14 Second
மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் குழந்தை பிறந்ததால் மருத்துவமனையிலேயே கொள்ளு பாட்டி குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவடத்தை சேர்ந்த சவிதா பாலு என்ற பெண்ணிற்கு ஏற்கெனவே நான்கு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் ஐந்தாவதாக மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால் சவிதாவின் பாட்டி குழந்தையின் கழுத்தை நெரித்துள்ளார்.
இதனை கண்ட செவிலியர் பாட்டியிடமிருந்து குழந்தையை காப்பாற்றியுள்ளார். மேலும் சமூக சேவகியான சத்யபாமா அவர்களது குடும்பத்திற்கு கவுன்சிலிங் கொடுத்துள்ளார். கொலை செய்ய முயற்சித்த கொள்ளு பாட்டி மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
Average Rating