ஆப்கன் சிறை மீது தாக்குதல்
ஆப்கனிஸ்தானில் உள்ள சிறைச்சாலை ஒன்றின் மீது தாலிபான் தீவிரவாதிகள் வெடிகுண்டு மற்றும் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலை தொடர்ந்து ஏராள மான சிறைக்காவலர்கள் கொல்லப் பட்டதாகவும் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் சிறையில் இருந்து தப்பியோடிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெடிகுண்டுகளுடன் சிலர் சிறைச்சாலையின் பிரதான வாயிலில் லாரியை மோதி தாக்குதல் நடத்தியதாகவும், அதே நேரத்தில் ராக்கெட்டுகள் வீசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 2 மனித வெடிகுண்டுகள் மற்றும் 30 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி சிறையில் அடைக்கப்பட்டிருந்த 400க்கும் மேற்பட்ட தாலிபான் தீவிரவாதி களை விடுவித்து சென்றதாக தாலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். சிறையில் இருந்த அனைத்து தீவிரவாதிகளும் தப்பி சென்று விட்டதாக கந்தகார் மாகாணத்தின் தலைவரும், ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாயின் சகோதரருமான வலிகர்சாய் தெரிவித்துள்ளார்.
Average Rating