ஐரோப்பா மற்றும் சர்வதேச நாடுகளில் “புலிகளின் குரல்” வானொலி ஒலிபரப்ப தடை!

Read Time:1 Minute, 23 Second

ஐரோப்பா மற்றும் சர்வதேச நாடுகளில்”புலிகளின் குரல்’ வானொலி ஒலிபரப்பை நிறுத்தும் முயற்சிகளை இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது. இம் மாதம் 1 ஆம் திகதி முதல் புலிகளின் குரல் வானொலி தனது ஒலிபரப்பை சேர்பியாவிலிருந்து ஆரம்பித்தது.இதற்கான அனுமதியை சேர்பிய அரசாங்கம் வழங்கியிருந்தது. புலிகளின் குரலானது சேர்பிய செய்மதி ஊடாக ஐரோப்பா வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஒலிபரப்பானது. எனினும் “புலிகளின் குரல்”வானொலியானது விடுதலைப்புலிகளின் அதிகாரபூர்வ வானொலியென இலங்கை அரசாங்கம் சேர்பிய அரசிடம் செய்த முறைப்பாட்டையடுத்து இந்த ஒலிபரப்பை சேர்பிய அரசு நிறுத்தியுள்ளது. முன்னர் புலிகளின் குரல் வானொலியும் தமிழீழ தேசியத் தொலைக்காட்சியும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட “இன்ரெல்சற்12′ எனும் செய்மதி ஊடாக ஒலி, ஒளிபரப்பப்பட்டு வந்ததும் தெரிந்ததே.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகள் இயக்கத்தின் லண்டன் நிதி சேகரிப்பாளர் கொழும்பில் கைது
Next post கனடாவில் புலிகளின் வங்கிக்கணக்கில் 120 கோடி டொலர்கள்